Police Recruitment

பெண் காவலருடன் தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் கைது

பெண் காவலருடன் தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் கைது

மதுரையில் மது போதையில் பெண் காவலரை அவதூறாக பேசிய போலீசார் கைது செய்தனர். மதுரையை அடுத்த திருப்பாலை காவல் நிலைய போலீசார் ஐயர் பங்களா பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதல் நிலை காவலரான பஞ்சு என்பவர் டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி மது அருந்தி உள்ளனரா? என சோதனை செய்ய முயன்றார். அவரது பணிகளை தடுத்து நிறுத்திய வாகனத்தில் வந்த இருவரும் முதல் நிலை காவலரை அவதூறான வார்த்தைகளில் பேசி தகராறு செய்த பின் தப்பிச் சென்றனர். இது குறித்து பஞ்சு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த திருப்பாலை போலீசார் கே. புதூரை சேர்ந்த அஜய் ஆனந்த் வயது (36) ஆத்தி குளத்தைச்சேர்ந்த சூர்யா வயது (32) ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.