Police Recruitment

கார் ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது

கார் ஓட்டுநரை தாக்கிய மூவர் கைது

மதுரையில் கார் ஓட்டுநரை தாக்கியதாக சிறுவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது (36) கார் ஓட்டுனரான இவருக்கும் விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் வயது (23) வாடகை காரை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் வெங்கடேஷ் சனிக்கிழமை காரை துடைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் அவரது உறவினரான பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது (23) அரசரடியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் வெங்கடேஷிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். மேலும் காரையும் சேதப்படுத்தினர் இது குறித்து எஸ்.எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன் சூர்யா 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர் .

Leave a Reply

Your email address will not be published.