Police Recruitment

வழிப்பறி வழக்கில் மூவர் கைது

வழிப்பறி வழக்கில் மூவர் கைது

மதுரை டி.ஆர். ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் வயது (36) இவரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வழிமறித்த பி.பி குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுரளி வயது (32) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 900 ஐ பரித்துள்ளார். இதேபோல் கே. புதூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி முருகன் வயது (42) என்பவரிடம் ஆத்திகுளத்தில் முகவரி கேட்பது போல் நடித்து மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த அசோக் பிரசன்னா வயது (32) என்பவர் பணம் பறித்தார். இவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். மேலும் செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது (59) என்பவரிடம் வழிப்பறிக்கு முயன்றதாக ஆரப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் வயது (38) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.