


குற்றவாளியை துணிச்சலாக துரதகபிடித்த போலீசாருக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் பாராட்டு சான்று வழங்கி பாராட்டு
மதுரை மாநகர் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா மற்றும் தலைமை காவலர் திரு. செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
