Police Department News

காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் – சிறுமியர்

காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் – சிறுமியர் பிச்சையெடுத்து வந்தனர்.இதையறிந்த, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவினர் மற்றும் குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் சேர்ந்து, பிச்சை எடுத்த, 11 சிறுவர் – சிறுமியரை, நேற்று மீட்டனர்.இதில், ஏழு பேர், உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர், வேலுார் மாவட்டம் பணப்பாக்கத்தை சேர்ந்தோர் என்பது தெரியவந்தது
பின், மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மீட்பு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், குழந்தைகளின் கல்வி அவசியம் பற்றியும், அவர்களின் வாழ்க்கை பற்றியும், பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, ”குழந்தைகளை பிச்சையெடுக்க அனுப்ப கூடாது. மீறி அனுப்பினால், பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும்,” என, குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் எச்சரித்தார்

காஞ்சிபுரம் மாவட்டநிருபர் ம.சசி

Leave a Reply

Your email address will not be published.