
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்களில் 04 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தல ரூ.1,00,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.70,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
15.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022- ஆம் ஆண்டு 37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மருதாணிகுளம் பகுதியைச் சேர்ந்த முத்து இருள்(31) சுரேஷ்குமார்(27) தேவயானி(28) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த அஜய் கண்ணன்(24) மற்றும் திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்(49) ஆகிய 05 நபர்களையும் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வினோதா அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.ரெங்கநாயகி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.விஜய பாண்டியன் அவர்களின் சீரிய முயற்சியால் (15.04.2025) இன்று மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 05 குற்றவாளிகளில் முத்து இருள், சுரேஷ்குமார், தேவயானி, அஜய் கண்ணன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் மற்றொரு நபரான செந்தில் என்பவருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.70,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
