Police Department News

விபத்தில் பலியான உதவி-ஆய்வாளர்களின் உடல்களுக்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி

காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் பாலூர் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில் லாரி மோதிய விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த உதவி-ஆய்வாளர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது உடல்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உதவி-ஆய்வாளர் வெங்கடேசனின் உடல் காஞ்சீபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பெண் உதவி-ஆய்வாளர் புவனேஸ்வரியின் உடல் காஞ்சீபுரம் ஓரிக்கையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த துயர செய்தி கேள்விப்பட்டதும், காஞ்சீபுரம் சரக காவல் டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உதவிஆய்வாளர்கள் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.