Police Department News

காவலர்கள், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் குடும்பம் உண்டு

காவலர்கள், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் குடும்பம் உண்டு

தென் மண்டலம் காவல்துறை தலைவர் திரு. அன்பு அவர்கள் தான் பொறுப்பேற்ற நாள் முதல் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார், பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு அதிகாரிகளை தங்களின் நிர்வாக வசதிக்காக பணி இட மாற்றம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வுதான், அதிலிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்ட காவல் துறையினரை, குறிப்பாக காவல் ஆய்வாளர்களை தங்கள் பணிபுரிந்த இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு நிறைய பேர் மாற்றப்பட்டுள்ளனர், இவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களின் நலன் கருதியும் மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்களின் மன அழுத்தத்தை சரி செய்யும் வகையில் இவர்கள் தங்கள் மனைவி குழந்தைகளை, மற்றும் உடல் நலம் குன்றிய பெரியவர்களையும் நேரில் பார்த்து கண்காணிக்வும் வழிவகை செய்யலாம். மேலும்
கொரோனா காலத்தில் தன் உயிரையும் துச்சமென மதித்து, தன்னுடைய இனிய குடும்பத்தையும் மனைவி, குழந்தைகளையும் தன் வீட்டில் உள்ள வயதான பெரியவர்களையும் பிரிந்து வெளியூர்களில் பணி புரிந்து வரும் சார்பு ஆய்வாளர்களுக்கு விருப்பபணியிட மாற்றம், வழங்கியுள்ள தென் மண்டல காவல் துறை தலைவர் (IG) அவர்களின் செயல் மிகவும் பாராட்தலுக்குறியது. என்றாலும் தேர்தல் பணியிட மாற்றத்தில் சென்ற காவல் ஆய்வாளர்களையும் மீண்டும் அவரவர் சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் செய்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க,, உத்தரவு இட்டால், காவல் ஆய்வாளர்கள், பலர் நிம்மதி பெற்று மன அழுத்தம் நீங்கி மிக மகிழ்ச்சியுடன் தங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்வார்கள்,

Leave a Reply

Your email address will not be published.