Police Department News

“காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம்” -தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவிப்பு

“காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம்” -தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் துறை விண்ணப்பதாரர்களில் (Department Candidates) பதிவு எண். 3150001 முதல் 3150465 வரையுள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 465 மற்றும்

பதிவு எண். 8150001 முதல் 8150100 வரையுள்ள 100 பெண் விண்ணப்பதாரர்கள் மொத்தம் 565 துறை விண்ணப்பதாரர்களுக்கு 11.01.2020 அன்று நடைபெறுவதாக இருந்த உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டு 13.01.2020 அன்று நடைபெறும்.

எழுத்துத் தேர்வு மையம் ஹால் டிக்கெட்டில் உள்ளவாறு அதே மையமான தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெறும்.

பொது விண்ணப்பதாரர்கள் பதிவு எண். 3110001 முதல் 3113252 வரையுள்ள 3252 ஆண் விண்ணப்பதாரர்கள்

மற்றும் 811001 முதல் 8110695 வரையுள்ள 695 பெண் விண்ணப்பதாரர்கள் மொத்தம் 3947 பொது விண்ணப்பதாரர்களுக்கு(General Candidates) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு 12.01.2020 அன்று தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை கல்லூரி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, மற்றும் விகாசா பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெறும் ” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.