Police Department News

அருப்புக்கோட்டை அருகே
குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை.

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டை அருகே
குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை.

அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் அவரது மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்.

இறந்த பெண் மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்,அவருடன் சேர்த்து மகள்களான ஜெயலட்சுமி, ஜெயதுர்காஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூவரும் வெட்டி கொன்றுவிட்டு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து விட்டார் அவரது பெயர் சுந்தரவேலு எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மதிவாணன் அவர்கள் விசாரித்து வந்த நிலையில் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு கண்ணன் அவர்கள் இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாநில செய்தியாளர் VRK.ஜெயராமன் MA,Mphil

Leave a Reply

Your email address will not be published.