கண்காணிப்பு பணியில் தொய்வு 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்.
வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய நிலையில், கண்காணிக்க தவறியதாக, இரு எஸ்.எஸ்.ஐ., இரு ஏட்டுகள், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.சேலம், கன்னங்குறிச்சியில், கடந்த, 14, 15ல், ஏரிக்கரை சாலை, ராமநாதபுரம் கிழக்கு தெரு பகுதிகளில், வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நகை, பணம், மடிக்கணினி ஆகியவை கொள்ளைபோனது. இதுகுறித்து, நேற்று வரை, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஐந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, வாகன தணிக்கை, குற்றவாளிகளை கண்காணிப்பதில் தொய்வு காட்டியதாக, எஸ்.எஸ்.ஐ.,க்கள் சரவணன், விஷ்ணுராம், ஏட்டுகள் பாலசுப்ரமணியன், பிரித்விராஜ் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் விசாரித்து, கமிஷனர் செந்தில்குமாருக்கு அறிக்கையளித்தார்.
அவர், நான்கு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், மாநகரின் பிற போலீஸ் ஸ்டேஷன்களில், கண்காணிப்பு பணியில் தொய்வு காட்டுவோர், குற்றவாளிகளை கண்காணிக்க தவறுவோரின் பட்டியல் தயாராகிறது. அதில் இடம்பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.