Police Department News

சென்னையில் 26.01.2020 நேற்று நடந்த குடியரசு தின விழா, வாகன அணிவகுப்பில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

சென்னையில் 26.01.2020 நேற்று நடந்த குடியரசு தின விழா, வாகன அணிவகுப்பில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

   இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் மேதகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் கொடியேற்றி வைத்தார். கொடியேற்றிய  பின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை தொடர்ந்து  தமிழக காவல்துறை உட்பட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு  நடைபெற்றது. அதில் தமிழக காவல் துறை சார்பில் குற்றவாளிகளை பிடிக்க உதவும் கண்காணிப்பு கேமரா, பிரமாண்டமாக வாகனத்தின் முகப்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அகன்ற  திரையில், பொதுமக்களுக்கு உதவுவதற்காக, காவலன் SOS செயலி பற்றிய விழிப்புணர்வு பற்றிய காட்சிகளை வெளிப்படுத்தியபடி காவல்துறை அலங்கார ஊர்தி மக்களின் மனதை கவர்ந்த வண்ணம் கடந்து சென்றது. 
                           குடியரசு தின விழாவில் நடைபெற்ற அரசு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், சிறந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசினை தமிழக மேதகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழக காவல்துறைக்கு வழங்கினார். 
                            இதனை காவல்துறை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.A.K.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் மற்றும் திரு. S.K.பிரபாகர்,  அரசு உள்துறைச் செயலாளர்  ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.