Police Department News

சினிமா பட பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த போலீசார்

சினிமா பட பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த போலீசார்

நேற்று மதியம் சுமார் 1 மயளவில் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பெண் ஒருவர் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென்று இரண்டு வாலிபர்கள் அந்த பெண்ணிடமிருந்த பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர் உடனே பணத்தை பறி கொடுத்த அந்தபெண் கூச்சலிடவே அந்த பகுதியில் ரோந்து வந்த திடீர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.காசிராஜன் அவர்கள் மற்றும் ஏட்டு முத்துப்பாண்டி ஆகியோர் அவர்களை சினிமா பட பாணியில் விரட்டி பிடித்தனர் போலீசாரின் விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் ஹவுஸிங் போர்ட் பகுதி சேர்ந்த அப்துல் சேக் மற்றும் அருண் என தெரிய வந்தது.அவர்களிடமிருந்து பணப்பையை மீட்டு பூ விற்கும் பெண்ணிடம் ஒப்படைத்தனர் பின்னர் திருடர்களை கைது செய்தனர்

போலீசார் திருடர்களை விரட்டி சென்ற காட்சியை காண்காணிப்பு காமிராவிலும் நேரிலும் பார்த்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்

Leave a Reply

Your email address will not be published.