Police Department News

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

05.02.2020 ந் தேதி C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் திரு.தாமோதரன் (1671) மற்றும் திரு.அருள்கண்ணன் (883) ஆகிய இருவரும் கரிமேடு பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் சண்முகம் பிள்ளை 1 வது தெருவில் நின்றிருந்த TN 59 AM 6089 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் கொண்டு சென்று, தலைமை காவலர் திரு. அருள்கண்ணன் அவர்கள் CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORK AND SYSTEMS ) இணைய தளத்தில் வாகன எண்ணை பதிவிட்டு பார்த்தார். D2- செல்லூர் குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்படி வாகனம் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

ரோந்துபணியில் துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.