18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!! சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்.
குழந்தை தொழிலாளர்
(1986 ஆண்டு) சட்டத்தில் படி வீட்டு வேலை, உணவு நிர்வாகம், சிற்றுண்டி சாலை ,டீ கடை, வெவ்வேறு உணவு நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம்.
இச்சட்டத்தினை மீறும் உரிமையாளர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூபாய் 20,000 முதல் 50,000 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் இருப்பின் (04575240521) என்ற மாவட்ட அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.