மதுரை முத்துப்பட்டியில், கஞ்சா விற்பனை,காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை
மதுரை நகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான முத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சென்ற மாதம் 28 ந் தேதி மதியம் 2.30 மணியளவில் முத்துப்பட்டி R.M.S.காலனி 5 பனைமரம் முனீஸ்வரன் கோவில் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அங்கே சந்தேகப்படும்படி ஒருவன் கையில் கட்டை பையுடன் நின்று கொண்டிருந்தான் அவனைப் பிடித்து சோதனை செய்த போது அவனிடமிருந்து 1400 கிராம் கஞ்சா போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் இவர் முத்துப்பட்டி கண்மாய்கரையை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. உடனே அவனிடமிருந்து கஞ்சா போதை பொருளை கைப்பற்றி, அவனை கைது செய்தனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி