Police Department News

மதுரையில் முகநூல் மூலம்பழகி,சிறுமியை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

மதுரையில் முகநூல் மூலம்பழகி,சிறுமியை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது சபீன் இவருக்கு வயது 21, இவர் வாழைப் பழம் விற்பனை செய்யும்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மதுரை ஜெய்ஹிந்த் புரம், பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் முக நூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஜுலை 31 ந் தேதி அவரை முகமதுசபீன் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் ஆகஸ்ட்டு 1 ந் தேதி புகார் அளித்தனர். சிறுமி எடுத்து சென்ற மொபைல் போனின் சிக்னலை வைத்து திண்டுக்கல் விடுதியில் தங்கியிருந்த அவரைபோலீசார் மீட்டனர்.அப்போது அவருடன் இருந்த முகமது சபீனை மதுரைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அதில் சிறுமியை கடத்தியதும், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளீர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது சபீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.