மதுரை: 2018-ம் வருடம் மதுரை மாநகரை குற்றமில்லா மாநகராக மாற்ற பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. 2018-ம் ஆண்டினை விபத்தில்லா ஆண்டாக மாற்ற அனைவரும் முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
2. மதுரை மாநகரை தூய்மையான மாநகராக வைத்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது
3. பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது
4. 2018-ம் வருடம் புத்தாண்டை கொண்டாடும் அனைவரும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
5. பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற உறவை மேம்படுத்த வேண்டும்.
6. சாலை விதிகளை பொதுமக்கள் அனைவரையும் பின்பற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
7. காவல்துறை 24 மணி நேரமும் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.