மதுரை, செல்லூர் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை
மதுரை மாநகர் செல்லூர், D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், 60 அடி ரோட்டில் வசித்து வருபவர் பால்பாண்டி, இவருக்கு ஆனந்தி, நாகராணி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான ஆனந்தியை ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர், திருமணம் ஆனது முதல் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மகள் ஆனந்தி திடீர் என்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதனால் படுகாயமடைந்த ஆனந்தியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால் இன்று சிகிச்சை பலனலிக்காத நிலையில் உயிரிழந்தார் இதனை தொடர்ந்து ஆனந்தியின் தங்கை நாகராணி செல்லூர் D2, காவல் நிலையத்தில் புகாரளித்தார், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் கோட்டைச்சாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் தியாகப்பிரியன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி