Police Department News

சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து நூதனமுறையில் கடத்தி வரப்பட்ட 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த நவாஸ் என்ற இளைஞர் பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் ஃபோர்டபுள் சிடி பிளேயர் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அந்த இரண்டு பொருட்களும் வழக்கத்துக்கு மாறான எடையுடன் இருந்ததால், அவற்றை பிரித்துப் பார்த்தனர்.

அப்போது, பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரத்தில் சில்வர் முலாம் பூசப்பட்ட 9 வட்ட வடிவ தகடுகளும், சிடி பிளேயரில் இருபத்து ஏழு “E” வடிவ சில்வர் தகடுகளும் இருப்பது தெரியவந்தது. இவற்றினுள் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 782 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.