ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு 5,481 நபர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R. சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
பல்வேறு இடங்களில் நடந்த 32 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சாலை விபத்துக்கள் கடந்த ஆண்டு 8 சதவீதம் அதிகரித்தாக மாவட்ட எஸ்.பி கூறினார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த ஆண்டு விபத்து சம்பவங்கள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.