பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அம்பை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான்சன் அவர்கள் அம்பை பூக்கடை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்த பொது மக்களிடையே சமூக இடைவெளியின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தும் மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா வை ஒழிக்க முடியும் எனவும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும் தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி