Police Department News

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த, கொலை, கொலை முயற்சி, மணல் திருட்டு வழக்குகள் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த, கொலை, கொலை முயற்சி, மணல் திருட்டு வழக்குகள் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது

சாயர்புரம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருபவரை நேற்று (05/09/2020) ஶ்ரீவைகுண்டம் பேட்மா நகர், வீர சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் காளி என்ற காளிதாஸ் வயது 25, என்பவர் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலட்சுமி அவர்கள் வழக்கு பதிவு செய்து காளி என்ற காளிதாஸை கைது செய்தார்.

மேற்படி காளி என்ற காளிதாஸ் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகள் , ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.