Police Department News

மதுரை கீரைத்துறை பகுதியில் போலி பெண் மருத்துவர் கைது

மதுரை கீரைத்துறை பகுதியில் போலி பெண் மருத்துவர் கைது

மதுரை, கீரைத்துறை B4, காவல் நிலையத்திற்குட்பட்ட, இருளப்ப சாமி கோவில் தெருவில் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த காவலர்கள் கூட்டத்தில் உள்ள பொது மக்களிடம் விசாரித்த போது அந்தப் பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண் உரிய அங்கீகாரம் இல்லாமல் 10 ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவர் எனக் கூறி அந்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கு சிகிச்சை, மருத்துவம் அளித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலி மருத்துவரை கைது செய்த காவலர்கள் அவர் வீட்டில் வைத்திருந்த மருத்துவ கருவிகள், மற்றும் மருந்து, மாத்திரைகளை பதிவு செய்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.