Police Department News

மதுரையில், குடும்பத் தகராறு, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்

மதுரையில், குடும்பத் தகராறு, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்த பூசாரி மகன் நொண்டிச்சாமி வயது 58/2020, இவரது மகள் தமிழ்ச்செல்வி வயது 32/2020, இவருக்கும், மதுரை, மேல வாசல் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் முடிந்தது, அதன் பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெயர் வர்ஷிகா ஶ்ரீ, வயது 4,/2020, மற்றொரு குழந்தை வர்னிகா ஶ்ரீ, வயது ஒன்னரை/2020, ஆக குடும்பத்துடன், இவர்கள் மேலவாசல் குடிசை மாற்று வாரியம் D பிளாக், டோர் நம்பர் 5 குடியிருந்து வந்தனர், இந்த நிலையில் பாண்டி கடந்த சில ஆண்டுகளாக தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவிடம் தகராறு செய்தும் அடித்தும் துன்புறித்தி வந்துள்ளார் இதனால் தமிழ்செல்வி அடிக்கடி கணவனிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்று விடுவதும் வழக்கமாக இருந்து வந்தது, ஆனால் அப்போதெல்லாம் தன் மகளை சமாதானப்படுத்தி தன்னுடைய மருமகன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு செல்வார்,
மேலும், சம்பவ நாளான 27/09/2020, ம் தேதி இரவு சுமார் 10.45 மணியளவில் தமிழ்செல்வி, தன் மீதும், தன் குழந்தைகள் வர்ஷிகாஶ்ரீ, வர்னிகாஶ்ரீ ஆகியோர் மீதும் மண்ணென்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டார். உடனே தீ காயத்துடன் 3 பேரையும் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே ஒரு மகள் வர்ஷிகாஶ்ரீ இறந்து விட்டார், அதன் பின்
மற்ற இருவரையும் அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் இறந்து விட்டனர், இதனை தொடர்ந்து தமிழ்செல்வியின் தந்தை நொண்டிச்சாமி அவர்கள் மதுரை திடீர் நகர் C1, காவல் நிலையத்தில் புகாரளித்தார், இந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் திரு. ரமேஷ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள Cr No. 843/ CrPc 174(3) பிரிவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.