Police Department News

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் (28.09.2020)

தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985 மற்றும் 77 இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 வழக்கில் எதிரியான, தாழையூத்து, செல்வியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மகன் கிட்டான்@ நவநீதகிருஷ்ணன் (29) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி.சோபா ஜென்சி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி கிட்டான்@ நவநீதகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 28.09.2020 தாழையூத்து காவல் ஆய்வாளர்(பொறுப்பு) பாளை மத்திய சிறையில் சமர்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.