Police Department News

மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர்

மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர்

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில், மேலுர் காவல் நிலையம், கீழவளவு காவல் நிலையம், மேலவளவு காவல் நிலையம், கொட்டாம்பட்டி காவல் நிலையம் என நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களில், 85 பேர் காணாமல் போனது தொடர்பாக,
மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை மீட்கும் வகையில் வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களின் ஆலோசனைப்படி சிறப்பு முகாம் மதுரை, மேலூரில் உள்ள தனியார் திருமண மன்டபத்தில் நடைபெற்றது. மேலூர் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் காணாமல் போனவர்களின் பெற்றோர், மற்றும், உறவினர்களை வரவழைக்கப்பட்டு காணாமல் போன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபரங்கள் செகரிக்கப்பட்டன. முகாமில் கிடைத்த தகவலின்படி காவல் துறையினர் தனிப்படையமைத்து , காணாமல் போனவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் காவல் துறையினர் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.