Police Department News

மதுரையில் நூதனமாக, பைக் திருடிய ஆசாமி, போலீஸார் வலை வீச்சு

மதுரையில் நூதனமாக, பைக் திருடிய ஆசாமி, போலீஸார் வலை வீச்சு

மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் நூதன முறையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மதுரை, திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பண்டாரி, இவர் மதுரை சிவகங்கை மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரபல ஷோ ரூமிற்கு வந்திருந்தார் அங்கு வாகனத்தை நிறுத்த போதிய இடமில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளார், அப்போது இவருக்கு உதவி செய்வது போல நடித்து இவருடைய இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஆனந்த் பண்டாரி அவர்கள் E3, அண்ணாநகர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.