Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை, செல்லூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாநகர் செல்லூர் D 2, சட்டம், ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சுயராஜ்யபுரம் 6 வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன் மனைவி தனம் வயது 55/2020, இவருக்கு நதியா வயது 30/2020, என்ற மகளும், பிரசாத் என்ற மகனும் உள்ளனர். தன் மகள் நதியாவை உசிலம்பட்டி தாலூகா, வி. பெருமாள்பட்டியை சேர்ந்த பெரிய கருப்பத்தேவர் மகன் வடிவேல் என்பவருக்கு கடந்த 17/08/2016 ம் தேதி திருமணம் செய்து கொடுத்தனர், கணவன் மனைவி சந்தோஷமாக வாழ்கை நடத்தி வந்தனர் இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக நதியாவின் மனநிலை சரியில்லாம் இருந்து வந்தது இதற்காக மதுரை KK.நகரில் இருக்கும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 31 ம் தேதியன்று நதியாவின் கணவர் வடிவேல் காலை 8.15 மணியளவில் தனது மாமனார் கண்ணன் அவர்களுக்கு போன் செய்து, வீடு உள்பக்கமாக பூட்டியிருப்பதாகவும், தன் மனையை கூப்பிட்டாள் எந்த பதிலும் இல்லையென்றும் கூறவே, அவரும் வந்து கதவைத் தட்டி திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது நதியா வீட்டின் உள்ளே காற்றாடியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்ததாகவும், உள்ளே சென்று சேலையை அறுத்து நதியாவை கீழே இறக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர், அங்கே மருத்துவர்கள் நதியா இறந்து விட்டார் என கூறவே, நதியாவின் தாயார் தனம் அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையம் வந்து புகார் அளித்தனர், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆயவாளர் திரு. கோட்டைச்சாமி அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார்,

ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.