Police Department News

மனித உயிரைக் காக்கும் படியாக கிழக்கு தாம்பரத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமை காவலர் புருஷோத்தமன் அவர்கள்

மனித உயிரைக் காக்கும் படியாக கிழக்கு தாம்பரத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமை காவலர் புருஷோத்தமன் அவர்கள்

சென்னையில் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்
அன்றாட வாழ்க்கைக்கு போராடும் பொதுமக்களை எப்படியாவது பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர் இப்படிப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை தேடி போகும்போது உயிரைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். இதைப் கருத்தில் கொண்டு தாம்பரம் S11 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு .டேனியல் ராஜ் அவர்கள் மனித உயிரைக் காக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுடன் ஒன்றிணைந்து கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒலிபெருக்கி மூலமாகவும் பதாகைகள் மூலமாகவும் இலவசமாக முககவசமும் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு பற்றியும் அரசாங்க விதிமுறை பற்றியும் நன்மையான செயல்களை மிகவும் தெள்ளத் தெளிவாக செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஐயா .திரு .டேனியல் ராஜ் அவர்களுடன் இணைந்து உதவி ஆய்வாளர் திரு. முரளி மற்றும் தலைமை காவலர் திரு.புருஷோத்தமன் அவர்களும் சாலை ஓரங்களில் பசியோடு இருக்கும் முதியோர்களுக்கு இலவச உணவும் வழங்கிவருகிறார்கள்.பொதுமக்களும் அன்றி போக்குவரத்து காவலர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு காவல் நிலையத்தில் காவலர்களும் பயன்படும் வகையில் தினந்தோறும் ஊட்டச்சத்து உணவு மனம் அழுத்தம் வராமல் நல்ல ஆலோசனைகளை காவலர்களுக்கும் வழங்கி வருகிறார் இப்படி இரவு பகல் பாராமல் தன்னுடைய குடும்பத்தையும் மறந்து சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் பொதுமக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்கிறார். இப்படிப்பட்ட நல்ல செயல்களை காவல் துறையினருக்கே உதாரணமாக திகழ்கிறார்கள் தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு டேனியல் ராஜ் மற்றும் கிழக்கு தாம்பரம் உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமை காவலர் திரு.புருஷோத்தமன்அவர்கள் .

Leave a Reply

Your email address will not be published.