Police Department News

மனுக்களை நேரடியாக பெற்றும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் .

மனுக்களை நேரடியாக பெற்றும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் .

08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் மற்றும் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசின்னம்பட்டியில் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றனர்.

மேலும் நிலப் பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகளை புகார் மனுக்களாக தரும்படியும் கூறினார்கள். மேலும் அங்குள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வும், சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் அடியனூத்து பகுதியில் உள்ள பொதுமக்களை அணுகி புகார்களை நேரடியாக பெற்று கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.