Police Department News

நடக்கவிருந்த கொலையை முன் கூட்டியே தடுத்த காவலர்கள், காவல் ஆணையர் பாராட்டு

நடக்கவிருந்த கொலையை முன் கூட்டியே தடுத்த காவலர்கள், காவல் ஆணையர் பாராட்டு

எம்.கே.பி.நகர் பகுதியில், இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு கொலை குற்றத்தில் ஈடுபட இருந்த 3 நபர்களை கைது செய்து குற்றச்சம்பவம் நிகழாமல் தடுத்த, P-5 எம்.கே.பி.நகர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 25.09.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அ.கல்வியரசன், தலைமைக் காவலர் திரு.எம்.மலைவேல் (த.கா.24325) மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.ஆர்.கார்த்திக் (மு.நி.கா.32965) ஆகியோர் 19.09.2021 அன்று இரவு வியாசர்பாடி, பி.வி.காலனி, நேதாஜி மைதானம் அருகே ரோந்து பணியில் சென்றபோது, அங்கு இருட்டில் பதுங்கி இருந்த 3 நபர்கள் காவல் குழுவினரை பார்த்ததும் ஓடினர். உதவி ஆய்வாளர் கல்வியரசன் தலைமையிலான மேற்படி காவல் குழுவினர் துரத்திச்சென்று அந்த 3 நபர்களை பிடித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 1 கத்தியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1) திவாகர் (வ/25) வியாசர்பாடி 2) சங்கரேஸ்வரன் (வ/20) கொடுங்கையூர் 3) கிஷோர் (வ/21) வியாசர்பாடி என்பதும், மூவரும் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து அன்றைய தினம் சிசி மணி என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் காத்திருந்ததும் தெரியவந்தது. மேற்படி 3 நபர்களையும் காவல் குழுவினர் கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 25.09.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.