Police Department News

மதுரை, தெற்கு மாசி வீதி பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து, மீட்பு பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு படை வீரர்கள் மரணம்

மதுரை, தெற்கு மாசி வீதி பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து, மீட்பு பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு படை வீரர்கள் மரணம்

மதுரை தெற்குமாசி வீதி பகுதி விளக்குத் தூண் அருகில் உள்ள நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை ஒன்று உள்ளது, இது ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த கடையில் திடீரென தீ பற்றியது,

தீயை அணைப்பதற்கு, பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு படையினர், மற்றும் மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்போராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது, இந்த விபத்தில் தீயணைப்பு படை வீரர்கள் சிவராஜன் வயது 36, கிருஷ்ணமூர்த்தி வயது 30, கல்யாணக்குமார் வயது 30, சின்னகருப்பு வயது 30, ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர், அவர்களை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், அங்கு சிவராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், மேலும் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளித் திருநாளன்று ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் மதுரையில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.