Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூரில், உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மேலூர் காவலர்

மதுரை மாவட்டம், மேலூரில், உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மேலூர் காவலர்

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதி மேலூர் பேரூந்து நிலையம் அருகில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் நபர் ஒருவர் சுய நினைவின்றி கிடப்பதாக அட்டப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி திரு. ரகு அவர்கள் மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தார், ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிந்து, மேற்படி நபரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி முதலுதவி செய்து பின் தொடர் சிகிச்சைக்காக கடந்த 24 ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை தொடரப்பட்டது இந்த நிலையில் கடந்த 29 ம் தேதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். அதன் பின் அவரின் பெயர் விலாசம் எதுவும் தெரியாத நிலையிலும் அவரை தேடி யாரும் வராததால் சட்டப்படி அவரது பிரேதத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லாத நிலையில் மேலூர் காவல் நிலைய காவலர் திரு. சிவா அவர்கள் தானாக முன் வந்து அவ்வுடலை நல்ல முறையில் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார். இச்சம்பவம் போது மக்களிடமும், காவல் துறையினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.