Police Recruitment

மதுரை, வைகையாற்றில் 50 வயது மதிக்கத் தக்க நாபரின் பிணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, வைகையாற்றில் 50 வயது மதிக்கத் தக்க நாபரின் பிணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் வடக்கு மதுரை பகுதியின் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் திருமதி.முத்துமொழி அவர்கள். இன்று 18/12/2020 அன்று இவருக்கு கிடைத்த தகவலின்படி மதுரை வைகையாற்றின் வடபுறம் கல்பாலத்திற்கும் புதிதாக கட்டப்பட்டிற்கும் நீர் தேக்க மதகிற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத நபர் தண்ணீருக்குள் தலை கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்ததாக கிடைத்த தகவலின்படி இவரும் இவரது உதவியாளர் திரு. ஜெயபாண்டி அவர்களும் நேரில் சென்று பார்த்து அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் இறந்தவர் அதே பகுதியில் பல வருடமாக பராரியாக சுற்றி திறிபவர் என்றும் சற்று மனநிலை பாதித்தவர் எனவும் தெரிய வந்தது, உடனே அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் இறந்து கிடந்தவரின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படியான விசாரணை செய்ய புகாரளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.