Police Recruitment

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்

மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், B6, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி, MK புரத்தை சேர்ந்த ரவி மகன் கார்த்திகேயன் வயது 25/2020 இவர் கடந்த 13 ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் 2 வது தெரு, மாருதி மெட்டல் கடை அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த இரண்டு ரவுடிகள் கார்த்திகேயனிடம் தண்ணி அடிக்க, மற்றும் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர், அதற்கு அவர் தர மறுக்கவே வழி மறித்த இரண்டு ரவுடிகளும் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி அவர் பையில் வைத்திருந்த 1350/− ரூபாயை எடுத்து கொண்டு,அவர்களை பிடிக்க வந்த அக்கம், பக்கத்தினரையும் கொலை மிரட்டல் விட்டு தப்பி சென்றனர் உடனே கார்த்திகேயன் அவர்கள் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெய்ஹிந்துபுரம் 2 வது தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் என்ற மணி, அதே பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் மகன் மணிகண்டன் என்ற மொட்டை மணி என தெரிய வந்தது. புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் C சோமசுந்தரம் அவர்கள் வழக்கு பதிவு செய்து, ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.