Police Recruitment

சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

விருதுநகர் மாவட்டம்:-

சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடத்திவருகிறது தமிழக அரசு.

அந்த நிகழ்சியின் தொடக்கமாக அருப்புக்கோட்டை கட்டங்குடி சாலை விலக்கில் அருப்புக்கோட்டை வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத்,நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சாலையில் தெரியும்படியாக வெள்ளை நிறத்தில் Go slow என்ற வார்த்தையை விபத்து நடக்கின்ற பகுதிகளை எதுவென கண்டறிந்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படியாக வரைந்தனர் இதனால் சாலைவிபத்துக்கள் தவிர்கப்படும் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக செயல்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்சியில் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினரும் பங்கேற்றனர்.

மேலும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.