Police Recruitment

சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…

விருதுநகர் மாவட்டம்:-

சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…

பெருகிவரும் வாகனத்தின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது.

அதனை சீர்செய்யும் நோக்கில் தமிழ அரசின் சார்பில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக எமதர்மன் வேடமிட்டு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தை எடுத்துரைத்தவிதம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது.

இவைமட்டுமில்லாது கரகாட்டம் மற்றும் எமதர்ம தூதர்களின் கத்தி சண்டை காட்சிகளும் மக்கள் மத்தியில் இடம்பெற்றன.

மக்களின் நலனுக்காகவும் சமுதாய நலனை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் கண்டுகளித்தனர்.

அத்துடன் முககவசம் மற்றும் துண்டுபிரசுரங்களையும் போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் வழங்கி அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.