Police Department News

IT நிறுவன ஊழியர்கள் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த 2 கொள்ளையர்கள் கைது

சென்னையில் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த, வேலூர் மாவட்ட கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜிவ்காந்தி சாலை, கண்ணகி நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேப்டாப், இருசக்கர வாகனங்கள், நகைகள் திருட்டு குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்து குற்றவாளிகளைத் தேடி வந்த கண்ணகி நகர் போலீசார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாப்கள், 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்த அவர்கள், விசாரணை நடத்தினர். விசாரணையில், ஓ.எம்.ஆர். சாலை பகுதிகளில் திருடி, வேலூர் மாவட்டத்தில் குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.