Police Department News

சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் கடைக்கு சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர்.. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் பிறப்புறுப்பில் ரத்த காயம் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு மனித மிருகம் பாலியல் கொடுமை செய்திருப்பது தெரிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது  தனது வீட்டிற்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வரும் 50 வயதான முகமது அலி என்பவன் தான் சிறுமியை இந்த கொடுமைக்கு உள்ளாக்கியவன் என தெரியவந்தது.

கடைக்கு தின்பண்டம் வாங்க செல்லும் போது அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த முகமது அலி, புதன் கிழமை அன்று சாக்லெட் வாங்க சென்ற சிறுமியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமி கூறிய தகவலை கேட்டு அதிர்ந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணை நடத்திய அசோக் நகர் மகளிர் போலீசார் முகமது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து  அவனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.