Police Department News

ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு போதை ஆசாமிகள் 3 பேர் கைது.

ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு போதை ஆசாமிகள் 3 பேர் கைது. பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (24). அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் ஐ.சி.எப் வழியாக பைக்கில் சென்றபோது, அங்கு போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது தெரிந்தது. அவர்களை காவலர் கிஷோர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில், கிஷோர் மண்டை […]

Police Department News

*கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் உடுமலை காரத்தொழுவு-வை சேர்ந்த பொன்ராஜ்(27) என்பது தெரியவந்தது பின்னர் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சா மற்றும் ரூபாய் 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு […]

Police Recruitment

`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த

`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த நீலகிரி காவல்துறை2019-ம் ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவுசெய்து ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த அளவு குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நீலகிரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கொடும் குற்றங்கள் நடந்திராத ஆண்டாக 2019 நிறைவடைந்தது. ஆனால், நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 21 […]

Police Department News

வெற்றி அறிவிப்பில் தில்லுமுல்லு…வேதனையில் தீக்குளிக்க முயற்சித்த வேட்பாளர்…!

வெற்றி அறிவிப்பில் தில்லுமுல்லு…வேதனையில் தீக்குளிக்க முயற்சித்த வேட்பாளர்…! வாக்கு எண்ணிக்கையானது, சில வேட்பாளர்களை நொந்து நூலாக்கி விடுகிறது. அப்படி ஒரு வேட்பாளராக இருக்கிறார் ராமமூர்த்தி. வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் குளறுபடி இருப்பதாக தீக்குளிக்க முயற்சித்தார். சாலை மறியலிலும் கூட ஈடுபட்டு போராடி வருகிறார்.விருதுநகர் – கூரைக்குண்டு ஊராட்சியின் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சரவணன். அவரோடு, சரவணன் என்பவரும், பெண் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்தபொது, ராமமூர்த்தியும் சரவணனும் தலா 183 வாக்குகள் […]

Police Department News

காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் – சிறுமியர்

காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் – சிறுமியர் பிச்சையெடுத்து வந்தனர்.இதையறிந்த, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவினர் மற்றும் குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் சேர்ந்து, பிச்சை எடுத்த, 11 சிறுவர் – சிறுமியரை, நேற்று மீட்டனர்.இதில், ஏழு பேர், உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர், வேலுார் மாவட்டம் பணப்பாக்கத்தை சேர்ந்தோர் என்பது தெரியவந்தது பின், மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மீட்பு குழுவைச் […]

Police Department News

கார் மீது அரசு பஸ் மோதி விபத்து…ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி…!

கார் மீது அரசு பஸ் மோதி விபத்து…ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி…! திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மைய நாயக்கனூர் அருகே ஐயப்ப பக்தர்கள் மூன்று பேரும் அவர்களின் குழந்தைகள் இரண்டு பேரும் மதுரை வழியாக திண்டுக்கல் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். அந்த கார் அம்மையநாயக்கனூர் அருகில் வரும் பொழுது கார் டயர் திடீரென வெடித்ததால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் மாற்று பகுதியில் தடுப்பு சுவரை […]

Police Department News

கடலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

கடலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்! கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.டி பிரிவில் வரக்கூடிய காட்டு நாயக்கன் சமூகத்தை சார்ந்த மகேஸ்வரி என்பவர் எஸ்.சி (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்) என போலியாக சாதி சான்றிதழ் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும்,தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அபகரித்த அவருடைய வெற்றியை ரத்து செய்ய வலியுறுத்தியும், அவருக்கு போலியாக சாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் […]

Police Department News

தேக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து குடோன் தரைமட்டம்!

தேக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து குடோன் தரைமட்டம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. ஆலை செயல்படாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறையில் புதுஅப்பநேரி பகுதியைச் சேர்ந்த அட்சயராமானுஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. ஏ.வி.எம். என்ற பெயரில் செயல்படும் இந்த ஆலையில் 31 அறைகள் உள்ளது. அனைத்து வகை பட்டாசுகளும் தயாரிக்கும் வகையில் நாக்பூரில் […]

Police Department News

குளத்தில் மூழ்கி மூவர் பலி! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்

குளத்தில் மூழ்கி மூவர் பலி! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது மனைவி இந்திரா (வயது 34). இவரது மகள் சுமித்ரா (வயது 13), அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய மனைவி அனந்தம்மாள் செல்வி (வயது 43) ஆகியோர் இன்று (05.01.2020) காலை பனையூர் பெரியகுளம் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் பனையூர் பக்கமுள்ள புதுக்குளத்தில் அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நீச்சல் தெரியாத இவர்கள் மூவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் […]

Police Department News

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி டிரைவர்!

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி டிரைவர்! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!! திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்தும், கல்லை துக்கி வீசி உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வத்தலக்குண்டி திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. […]