Police Department News

`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!’ -அதிகாலையில் கணவனால்

`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!’ -அதிகாலையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்தனசேகர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அவரிடம் விசாரித்தபோது மனைவியை தெரியாமல் கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார். சென்னைக் கொளத்தூர், பாலகுமாரன் நகரைச் சேர்ந்தவர் தனசேகர். இவரின் மனைவி அம்சா (38). இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். அவர், 9-ம் வகுப்பு படித்துவருகிறார். தனசேகர், ஜி.பி.ரோட்டில் வாஷிங் மிஷின் சர்வீஸ் வேலை செய்துவருகிறார். சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு தனசேகர் அடிமையானார். அதனால் […]

Police Department News

போனை ஏன் எடுக்கல; வினையான விளையாட்டு!’ வீடியோ காலின்போது

போனை ஏன் எடுக்கல; வினையான விளையாட்டு!’ வீடியோ காலின்போது புதுவை வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்புதுச்சேரியில் வீடியோ காலில், தனக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்குக் கயிற்றை மாட்டிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி, கனகசெட்டிக்குளம் புதுநகரைச் சேர்ந்த கோதண்டத்தின் மகன் சுரேஷ் (28). இவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நிச்சயம் செய்யப்பட்ட […]

Police Department News

வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!’ விருத்தாசலத்தில்

வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!’ விருத்தாசலத்தில் இளம்பெண் உயிரிழப்புபிரியா சாவுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனை டாக்டருங்கதான் காரணம். அதனால அவங்கமேல உடனே நடவடிக்கை எடுக்கணும்’ எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (25). பொக்லைன் இயந்திரம் ஓட்டும் தொழிலாளியான இவர், பிரியா என்ற பெண்ணை 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 27-ம் தேதி பிரசவத்துக்காக […]

Police Department News

ரயில்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள் கைது…!

ரயில்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள் கைது…! திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் குறிப்பாக கோவை-நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ச்சியாக கொள்ளை நடந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே காவல்நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனையடுத்து ரயில் கொள்ளையர்களை பிடிக்க ஜோலார்பேட்டை மார்கமாக செல்லும் ரயில்களில் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.இந்த கண்காணிப்பில் ரயில்களில் தொடர்ச்சியாக பயணம் […]

Police Department News

புத்தாண்டு அன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட சொன்னார்: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ்.பி.- வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ

புத்தாண்டு தினத்தன்று உயரதிகாரிகளை பார்க்க வர வேண்டாம், குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள் என காவல் துறை அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், மைக்கில்வழங்கிய அறிவுரை வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அரசு அலுவலர்கள் தங்களது உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும், உயரதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மரபாக உள்ளது. காவல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்த நடைமுறை மரபில்இருந்து மாறுபடும் […]

Police Department News

பொன்னேரி உலகநாத கல்லூரியில் தேர்தலுக்கான முடிவுகளை வாக்குகள் எண்ணிக்கை என்ன பட்டிருக்கிறது இந்த பணிக்காக காவல்துறையினர் வெகு சிறப்பாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

பொன்னேரி உலகநாத கல்லூரியில் தேர்தலுக்கான முடிவுகளை வாக்குகள் எண்ணிக்கை என்ன பட்டிருக்கிறது இந்த பணிக்காக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு அரவிந்தன் அவர்களின் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு பவன் ரெட்டி அவர்களின் தலைமையில் பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு வெங்கடேசன் அவர்களுடன் உதவி ஆய்வாளர் திரு சிவராஜ் அவர்கள் குழுவினர் காவல்துறையினர் வெகு சிறப்பாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மிக சாமர்த்தியமாக காவல்துறையினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் […]

Police Department News

ஈரோடு.மாவட்டம். பவானிசாகரில்.உள்ள.மேல்நிலைப் பள்ளியில்

ஈரோடு.மாவட்டம். பவானிசாகரில்.உள்ள.மேல்நிலைப் பள்ளியில்.இன்று.மாவட்ட.ஓன்றிய.ஊராட்சிமன்ற.தலைவர்க்கான.ஓட்டு.எண்ணிக்கை. நடைபெற்றது..இதில்.மாவட்ட.துணை. கண்பாணிப்பாளர்.தலைமையில்..காவல் துறை ஆய்வாளர்கள்.உதவி.ஆய்வாளர்கள்..எந்தஓரு.அசம்பாவிதம்.ஏற்பாடமல்.பணிபுரிந்த.அனைத்து. காவலர்களுக்கு.. போலீஸ்இநீயூஸ்.சார்பாக.சல்யூட்..💐💐.செய்தியாளர்.ஈரோடு.மாவட்டம். நன்றி

Police Department News

லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்!’ -திருச்சி பயணிகளுக்கு அதிர்ச்சி

`லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்!’ -திருச்சி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக்கல் ராணிபேருந்து பயணிகளிடம் நைசாகப் பேசி மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நகைகளைக் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சிக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் வந்து போகும் பயணிகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும். அந்த வகையில் திருச்சிக்கு வருகை தரும் பயணிகளைக் குறிவைத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக […]

Police Department News

தம்பியின் நண்பன் மீது காதல்; ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கணவன்!’

தம்பியின் நண்பன் மீது காதல்; ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கணவன்!’ -அதிர்ச்சி கொடுத்த ஆவடி இளம்பெண்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால், ரயிலில் சென்ற கணவரைக் கீழே தள்ளிவிட்டோம். மீண்டும் அவர் உயிருடன் வருவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’ எனப் போலீஸில் கூறியிருக்கிறார் இளம்பெண் ஒருவர். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (33). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி அஸ்வினி (26). இத்தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், கருத்து-வேறுபாடு […]

Police Department News

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது!

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பாஜக கட்சியின் நிர்வாகிகள் நெல்லை […]