திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர். இதில் மிருகங்களின் விலைகளை பட்டியல் இட்டு விவரிக்கின்றார்கள். மிருகங்களின் விலையை காட்டிலும் மனிதர்களின் விலை மிக கேவலமானதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். உள்ளாட்சி தேர்தல் குறுகிய காலத்தில் இருப்பதால் இதனால் அங்கு உள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
Author: policeenews
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கல் லூரி மாணவர் கடலில் மூழ்கி மாய மானார். 4 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் சூர்யா (18). இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜய் (18), ரமேஷ் மகன் விஜய் (19), சுப்பிரமணி மகன் கோவர்த்தன் (19), ஆனந்த் (18) உள்பட 14 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கலை அறிவி யல் கல்லூரியில் படித்து வருகின் றனர். முத்தியால்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியி […]
ரயில் நிலைய நடைமேடையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்: உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார்
தானே பிரசவம் பார்த்து பெற்ற குழந்தையுடன் ரம்யா, கணவர் வெங்கடேஷ். உடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார். எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தனக்குத் தானே அவர் பிரசவம் பார்த்துக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த பாப்பநாடுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக சென்னைக்கு வந்த இவர், நிறைமாத கர்ப்பிணியான மனைவி ரம்யாவையும் (25) […]
அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்
சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: பொன் மாணிக்கவேல் அறிவிப்பு சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான . சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார். சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கொடுக்க மறுப்பதாக, பொன் மாணிக்கவேல் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, […]
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நகைக்கடை பூட்டை உடைத்து 140 பவுன் கொள்ளை: ஹெல்மெட் அணிந்து புகுந்த மர்ம நபர் கைவரிசை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த் தாண்டத்தில் நகைக்கடையில் பூட்டை உடைத்து 140 பவுன் நகைகளை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார். காவல் நிலையம் அருகே நடந்த இந்த துணிகர சம்பவத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்(45). இவர், ‘சிலங்கா ஜுவல்ஸ்’ என்னும் பெயரில் நாகர் கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். கடையின் பின் புறம் அவரது வீடு உள்ளது. நகைகள் கொள்ளை […]
காவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்
மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு பயிற்சியினர் மற்றும் மதுரை சமூகவியல் துறையினருடன் இணைந்து நேற்று (14.12.2019) மதுரை மாநகர் கிரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த அலுவலக கட்டிடத்தை வேலூர் சரக துணைத் தலைவர்(DIG) திருமதி காமினி ஐபிஎஸ்,வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தனர் போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது!
போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது! சேலத்தில், போலி ஆதார் அட்டை, பான் கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏழு பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் தவணை முறையில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்து வரும் கடைகள், துணிக்கடைகளில் நூதன முறையில் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை கடனாகப் பெற்று […]
திருப்பூர் மாநகராட்சியில் ஊத்துக்குளி பகுதியில் நீதித்துறை மாஜிஸ்திரேட்
திருப்பூர் மாநகராட்சியில் ஊத்துக்குளி பகுதியில் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கனம் நீதிபதி திருமதி. அல்லி Ml., அவர்கள் திரு. கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் திருமதி. திஷா மித்தல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காட்டில் செயல்பட்டு வரும்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காட்டில் செயல்பட்டு வரும் சாவேரி டிரேன்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் சண்முகம் என்பவர் அலுவலகத்தில் இருந்த போது, உள்ளே புகுந்த சேலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்திற்குள் புகுந்து சண்முகத்நை சராமரியாக வெட்டி படுகொலை செய்தனா்.. கோபி காவல்துறையினா் விசாரணை மேற்கொணாடுள்ளனா்… போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் ஈரோடு செந்தில் குமார்