தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரூ.390 கோடி மதிப்பிலான புதிய பாலங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 82 திட்டங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 3 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: அரியலூரில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படும். பெரம்பலூர், சின்ன முட்லூ பகுதியில் […]
Author: policeenews
பெரியார் சிலை தொடர்பான சர்ச்சை கருத்து: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- தபெதிகவை சேர்ந்த 3 பேர் கைது
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து கோவை மாநகர போலீஸார் விசாரிக்கின்றனர். திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது. இதையடுத்து கோவையில் 6 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் தாக்குதல் இந்நிலையில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் […]
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் பரோலில் வந்தார்: அருப்புக்கோட்டையில் 155 போலீஸார் பாதுகாப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரன் 15 நாள் (பரோல்) விடுமுறையில் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். அவருக்கு டிஎஸ்பி தலைமையில் 155 போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்த பொய்யாழி – சந்திரா தம்பதியின் மூத்த மகன் ரவிச்சந்திரன்(48). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் […]
ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்: தோழியுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தால் கணவர் கைது
கணவரின் கூடா நட்பாலும், வரதட்சணைக் கொடுமையாலும் ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் விவகாரத்தில், கணவரின் தோழியுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து கணவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஜீவிதா என்ற மகளும், முரளி என்ற மகனும் உள்ளனர். ஜீவிதா வானகரம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஜீவிதாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஐ.டி.யில் பணிபுரியும் ரோஸ் என்பவருக்கும் […]
சென்னையில் அதிர்ச்சி: காவல் நிலைய வாசலில் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுகொண்டு தற்கொலை
சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர் எல்லையின் கீழ் வரும் அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார்(33). பணியில் சிறப்பாக செயல்பட்டவர் சதீஷ்குமார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியிலுள்ள மேலையூர் ஆகும். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் நேற்று நள்ளிரவு தான் பணியாற்றும் ஸ்டேஷனுக்கு சாதாரண உடையில் […]
மதுரை மாவட்ட செய்திகள்} நடுரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
{ மதுரை, மதுரை திருநகர் அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 27). நேற்று திருப்பரங்குன்றம் சாலை மதுரை கல்லூரி எதிரே நின்று கொண்டிருந்த முத்துலட்சுமியை ஒருவர் வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் அவர் திடீரென்று கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமி சரமாரியாக வெட்டினார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் இருந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு […]
காலை நேர அணிவகுப்பு:- தினமும் அன்றைய நிகழ்ச்சி மற்றும் எந்த இடத்தில் காவல் பணி
என்பதை தெரிவிப்பதற்காகவே அருப்புக்கோட்டை காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி 3/3/18 சனி காலை 7.15 மணியளவில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றபோது எடுத்தபுகைபடம். VRK.ஜெயராமன் MA Mphil. மாநில செய்தியாளர், அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்.
முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி
முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் […]
பணி நிறைவு விழா: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் CID SI யாக பணியாற்றுபவர்
திரு.கண்ணன் அவர்கள் மக்களின் நலனுக்காக காவல் துறையில் இனைந்து அரும்பணியாற்றி இனிதே பணி நிறைவு பெறுகின்ற விழா நடைபெற்றது அவரை பற்றிய சில வார்த்தைகள் சிரித்த முகம்,பளிச்சிடும் பேச்சு,பணியில் திறமையும் நேர்மையும் இவருடன் ஒட்டிப்பிறந்தது என கூறலாம் திரு.கண்ணன் அவர்களின் பணி நிறைவு விழாவின் போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி திரு.கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனபால் மற்றும் திரளாக […]
சென்னையில் பயங்கரம்: கூடா நட்புக்கு இடையூறு; 9 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த இளைஞர் கைது
சென்னையில் நடுத்தர வயதுப் பெண்ணுடன் கூடா நட்பு வைத்திருந்த இளைஞர், அந்த நட்புக்கு இடைஞ்சலாக இருந்த 9 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்தார். இதனால் அந்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். சிறுவனின் தாயை விசாரித்து வருகிறார்கள். சென்னை எம்ஜிஆர் நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (38). வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை […]










