Police Department News

லட்சுமி விலாஸ் வங்கியில் கொள்ளை முயற்சி

அரியலூர் லட்சுமி விலாஸ் வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முடியாததால் பலகோடி ரூபாய் மதிப்பிலான் பணம் நகைகள் தப்பின. 3 நாள் வங்கி விடுமுறைக்குப் பின் இன்று வங்கியைத் திறக்க வந்த மேலாளர் கேட்டின் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் வந்தபோது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் நுழைந்தது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய போலீசார், வங்கியின் […]

Police Department News

ராணுவ ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு 818 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ தொகுதியின் கீழ் அடங்கியுள்ள கிளார்க், ஸ்டெனோகிராபர், தீயணைப்பு வீரர்கள், உதவியாளர்கள், பிட்டர், டெய்லர், பெயின்டர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், சமையல் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களின் மொத்த காலி எண்ணிக்கை 818. இடஒதுக்கீடுப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். www.aocrecruitment.gov.in என்ற இணையதளம் மூலம் […]

Police Department News

புதுக்கோட்டையில் மது பாட்டில்கள் பறிமுதல்

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை வண்ணாரப்பட்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அங்கிருந்து திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சிறிய வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோ மற்றும் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கணபதிபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டில் […]

Police Department News

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஜூராசிக் பார்க் கண்காட்சி தொடங்கியது

ஈரோடு: சிவன்யா ஈவன்ட்ஸ் மற்றும் புரமோசன்ஸ் சார்பில் ஜூராசிக் பார்க் கண்காட்சி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சிவக்குமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இதுகுறித்து கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், கருணாகரன் ஆகியோர் கூறும்போது, “ஈரோட்டில் முதல் முறையாக ஜூராசிக் பார்க் கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் நுழைவு வாயிலில் மலையின் குகைக்குள் செல்வது போன்று அமைக்கப்பட்டு […]

Police Department News

காஞ்சிபுரத்தில் கார் கடத்தல் கும்பல் கைது

காஞ்சிபுரம்: அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர், நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எலப்பாக்கத்திலிருந்து வேகமாக வந்த, ‘இன்னோவா’ காரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மடக்கினர். காரில் வந்தவர்களை விசாரித்த போது, கார் கடத்தல் கும்பல் என்பது தெரிந்தது. மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே கார்களை இவர்கள் கடத்தியதும் தெரிந்தது. நள்ளிரவில் கார்களை மடக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, உரிமையாளர்களிடம் இருந்து கார்களை கடத்துவது இவர்களின் பாணி. மேலும், திருட்டுக் கார்களை […]

Police Department News

போலீஸ்  இ  நீயூஸ்  மின்  இதழ்   ஆசிரியர்   சார்பில்    மற்ற   அலுவலகத்தில்     பணியாற்றும் நண்பர்களுடன்  அனைத்து   செய்தியாளர்கள்  உடன்     இணைந்து   வணங்கி   மகிழ்ந்து  காவலர்கள் தின  வாழ்த்து 

கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை  தனது  கண்களாகவும், தான் பணிபுரியும்  இடத்தை இறை குடியிருக்கும்   இல்லமாக நினைத்து   காக்கி சீருடையின் தன்மானம் காத்து, மக்கள் நலனை பாதுகாக்க  குற்றவாளிகளை  வேட்டையாடும்    வேட்டையில் களம் பல கண்ட  வேங்கையாக வலிமை  மிக்க காவல்துறை  பணியில்  ஆயிரம் குறைகள் இருந்தாலும் மன  நிறைகளுடன்   தூக்கத்தை  இலந்த  விழிகளுடன்   துயரங்கள் ஆயிரம் தங்கள் வாழ்வில் இருந்தாலும் வாழும் மக்களை    காக்கும் எல்லை சாமியாக   வலம் வந்து நலம் நல்கும் எங்கள் குல […]

Police Department News

உண்டியலை உடைத்து திருட முயற்சி தப்பி ஓடும்போது மாட்டிய திருடர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி-ஆய்வாளர் செந்தில்வேல் மற்றும் காவல்துறையினர்ூ தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மரக்காணம் பகுதியை சேர்ந்த சுதாகர் (31) ஆனந்த்(23) மற்றும் பாண்டியன் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோவில் உண்டிலை உடைக்க முயன்றபோது அலாரம் […]

Police Department News

தருமபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பொன்விழா ஆண்டு கண்காட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சி திறப்பு விழாவிற்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டிகங்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், தீயணைப்பு கருவிகள், வெடிபொருட்களை கண்டறியும் உபகரணங்கள், காவல்துறையில் பயன்படுத்தப்படும் புலன் விசாரணை பொருட்கள் மற்றும் […]

Police Department News

கும்பகோணம் , உத்திரை கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை, 1 கைது

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை காவல் நிலைய  சரகத்திற்க்குட்பட்ட    உத்திரை கிராமம்  மெயின் ரோடு  விநாயகர் கோவில்  அருகில்  வசித்து வரும்  பழனிசாமி மகன் ரஜினிகாந்த் (30) என்பவர்   தனது  வீட்டில்   மது பாட்டில்களை   விற்பனை செய்வதாக   வந்த தகவல் அடிப்படையில்  சுவாமிமலை  காவல் நிலைய   ஆய்வாளர்  ரேகாராணி  உத்திரவின் படி  உதவி ஆய்வாளர்  குகன்   மற்றும் காவலர்கள்  நேரில்  சென்று    விசாரணை  நடத்தினர்கள்  விசாரணையில் அங்கு  மது விற்பனை செய்து வருவது   தெரியவந்தது இதையடுத்து சுவாமிமலை  காவல் துறையினர்  […]