சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றம் நடவாமல் இருக்க மற்றும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஊரெங்கும் CCTV கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற உத்தரவின் படி இன்று செங்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 65 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் […]
பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது எஸ்.எஸ்.காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரிய முத்து (வயது39). இவரது பசுமாடு திருடுபோனது. அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாட்டுச் சந்தை நடைபெறும் இடங்களுக்கு சென்று தனது மாட்டை பெரியமுத்து தேடி வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கு சென்றபோது, அவருடைய மாடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது தனது மாட்டை கணவன்-மனைவி விற்பனைக்காக கொண்டு […]
நமாண்டஅள்ளி புது காலணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மனைவி சாவு. கனவர் படுகாயம். திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி காந்தி (வயது.36) இவரது மனைவி நந்தினி (வயது.32) இவர் ஓசூர் அசோர் லைலாண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு திக்சாத் (வயது. 8) மைத்ரேயன் (வயது .6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் நந்தினி குடும்பத்துடன்தாய் வீடான தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள நமாண்டஅள்ளி கிராமத்திற்க்கு வந்தனர்.நேற்று காலை […]