சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
தென்காசியில் டிரைவரிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 53). இவர் அங்குள்ள பட்டாசு கடையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தென்காசியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 18-ந் தேதி வந்தபோது தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான […]
கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு. திருப்பூர் மாநகர திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவராயன் பாளையத்தில் மாலை 18:30 மணிக்கு மகேஷ்,ஜெனி என்பவர்களின் மகள் ஜனனி என்பவர் தவறவிட்ட கொலுசினை தலைமைக் காவலர் திரு.கோபாலக்கிருஷ்ணன் HC647 என்பவர் தேடி கண்டுபிடித்து சரியான நேரத்தில் ஒப்படைத்தார். இச்செயலை செய்த தலைமைக் காவலரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகள் காரணமா? போலீசார் தீவிர விசாரணை வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (வயது60). இவர் பூங்கா வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரமேஷ் இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஓட்டேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகள் கண்டித்ததால் […]