சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
அன்று… எலியால் மாயம்… இன்று இடமாற்றத்தால் மாயம்: போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை காணவில்லை சென்னையில் போலீஸ் நிலையங்களில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது. கோயம்பேடு மற்றும் மெரினா போலீஸ் நிலையங்களில் கஞ்சா பொட்டலங்களை எலி தின்றுவிட்டதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து அதில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கிண்டி போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சா பொட்டலங்கள் மாயமாகி இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். […]
கொல்லு பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே உள்ள கொல்லுபட்டியில் வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் ராணி (வயது. 60) என்பதும் வீட்டில் வைத்து அரசு […]
லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!! லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!! பெங்களூர் காவல் துறையினர் இன்று அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோத கும்பலை அதிர்ச்சியுற வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஊரடங்கு காலங்களில் பெருவாரியான குற்றங்கள் குறைந்து இருந்தாலும், குடும்பங்களுக்குள் ஏற்படும் மறைமுக வன்முறைகள் அதிகரித்து இருந்தது. செயின் பறிப்பு, வழிப்பறி, கொலை, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் ஊரடங்கில் குறைந்திருந்த […]