விருதுநகர் மாவட்டம்:-
போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்…
பெருகிவரும் வாகனத்தினால் அன்றாடம் உயிரிழப்பு மற்றும் எத்தனையோ பிரச்சினைகள்தான்.
அந்தவகையில்
அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் துறையினருக்கு பேருதவியாக APTEX என்ற ஜவுளிக்கடை உரிமையாளர் தம்முடைய சொந்த செலவில் தயார்செய்து பொதுமக்களின் முன்னிலையில் பொதுமக்களுக்காக பேரிகார்டுகளை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களிடம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நாடார் சிவன்கோவில் அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்சியின்போது பொதுமக்களுக்காக இலவசமுககவசமும் வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தத்தில் தாய் மகன்(சிறுவன்) நின்றுகொண்டிருந்தபோது துணைகண்காணிப்பாளர் சிறுவனுக்கு முககவசம் வழங்கியும் அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் .
மக்கள் பணியாற்றுவதில் காவல் துறையினருக்கு புத்துணர்வு அளிக்கின்றவிதமாக பலம் சேர்க்கும் வகையில் பேரிகார்டுகள் வழங்கிய APTEX ஜவுளிக்கடை உரிமையாளருக்கு நன்றியை தெரிவித்தார் காவல் துறை துணைகண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள்.