Police Department News

மதுரை, மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி மரணம், மேலூர் போலிசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி மரணம், மேலூர் போலிசார் விசாரணை

மதுரை மாவட்டம், கூத்தப்பன்பட்டியில் வசித்து வரும் அன்பு மனைவி செல்வி வயது 29/21, இவரது கணவர் அன்பு அவர்கள் மேலூர் CEOA பள்ளி அருகே கட்டிவரும் புதிய கட்டிடத்தில் இரவு நேரம் வாட்சுமேனாகவும், பகல் நேரத்தில் கட்டிடப்பணியாளராகவும் கடந்த ஒன்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 27 ம் தேதி மாலை 7.10 மணியளவில், CEOA பள்ளி அருகே பழுதாகி நின்ற ஒரு வாகனத்தை வாகன ஓட்டுனருக்கு உதவும் நோக்கில் ரோட்டை கடந்தார், அந்த நேரம் பார்த்து அடையாளம் தெரியாத திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த வாகனம் ஒன்று இவர் மீது மோதியது, அதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். தகவல் அறிந்த கட்டிட காண்ட்ரக்டர் சக்திவேல் அவர்கள், இவரது மனைவி செல்விக்கு தகவல் தெரிவித்தார் உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து விட்டு மேலூர் காவல் நிலையம் சென்று தன் கணவனை விபத்துக்குள்ளாக்கிய வாகனத்தை கண்டுபிடித்து அந்த வாகன ஓட்டியின் மீது தகுந்த சட்டப்படியான நடவடிக்கையெடுக்க வேண்டி புகார் அளித்தார் . புகாரை பெற்றுக்கொண்ட மேலூர் காவல் ஆய்வாளர் திரு சார்ளஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் SI 2, அவர்கள் வழக்கு பதிவு செய்தார்கள், ஆய்வாளர் திரு சார்ளஸ் அவர்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.