Police Department News

மதுரை வாடிப்பட்டி பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது, 23 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல், வாடிப்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை வாடிப்பட்டி பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது, 23 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல், வாடிப்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 23 பவுன் நகை, மற்றும் 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் சாலையில் நடந்தும், மொபைட்டி செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆனந்த் ஆரோக்கிய ராஜ், அவர்களின் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி சில்வியா ஜாஸ்மின், சார்பு ஆய்வாளர்கள் ஆனந்த், கேசவன், மணிமாறன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டி போலீசார் தீவிர விசாரணே நடத்தி வந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி கால்நடை மருத்துவ மனை அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை மாவட்டத்தில் புற நகர் பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகைகளை பறித்தும் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மதுரை ஆனையூரை சேர்ந்த கார்த்திக்ராஜா, வயது 24/21, மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரமேஸ்குமார் வயது 24/21,என்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 23 பவுன் நகை, மற்றும் 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.