Police Department News

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாடல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர்

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பாடல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை காவல்துறையினர்

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் வாகனச் சோதனை சாவடிகள் அமைத்து வாகனத் தனிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வருகைதரும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வீரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெற்குவாசல் காவல்நிலைய எல்லையிலுள்ள போக்குவரத்து சந்திப்பில் காவல்துறை இசைக் குழு ஆயுதப்படையை சேர்ந்த காவலரான மதிச்சியம் பாலா, நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை பாடியும் கொரோனா பரவலால் தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை எடுத்துக் கூறியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர் தெற்குவாசல் காவல்துறையினரின் இந்த வித்தியாசமான அணுகுமுறையை பார்த்து வாகன ஓட்டிகள் பாராட்டிச் சென்றனர். தொடர்ந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றி வருபவர்களை பிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏறகபடுத்தி வருவது பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.